Monday, November 27, 2023

26.11.2023 மாமதுரைக் கவிஞர் பேரவை- கவியரங்கம் 17- செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே - தமிழரின் தொன்மை- நூல் வழங்குதல்

                     26.11.2023 மாமதுரைக் கவிஞர் பேரவை- கவியரங்கம் 17- 

செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே














26.11.2023 அன்று காலை, மாதுரைக் கவிஞர் பேரவையின் சிந்தனைக் கவியரங்கம், மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை பள்ளியில் நடந்தது. தலைவர் பேராசிரியர் சக்திவேல் தலைமை வகித்தார்செயலர் கவிஞர் இரா.இரவி வரவேற்றார். புரட்சிக் கவிஞர் மன்றத்தின்  தலைவர் பி.வரதராசன் மூன்று கவிஞர்களுக்கு விருது வழங்கி சிறப்புரையாற்றினார்.  துணைத்தலைவர் முனைவர் இரா.வரதராசன்முன்னிலை .வகித்தார். மறைந்தும்  மறையாத கவிமாமணி சி . வீரபாண்டியத் தென்னவன் சார்பில் அவரது மகன்  ஆதி சிவம் தென்னவன்  விருதுக் கேடயம் ஏற்பாடு செய்தும், மாமதுரைக் கவிஞர் பேரவைக்கு வழங்கியும், வாழ்த்துரையாற்றினார்.

மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சக்திவேல் அவர்களின் தலைமையில் "செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே" என்ற தலைப்பில்கவியரங்கம்.நடந்தது. கவிஞர்கள் பேராசிரியர் சக்திவேல், இரா. இரவிமுனைவர் இரா .வரதராசன்இரா .கல்யாணசுந்தரம்மு .இதயத்துல்லா,( இளையாங்குடி ) , மு.க.பரமசிவம், பெரி . கரு .சம .சமயக்கண்ணு, கு .கி .கங்காதரன்கி. கோ.குறளடியான்ச .லிங்கம்மாள் செ.அனுராதா இராம பாண்டியன்சாந்தி திருநாவுக்கரசு  ஆகியோர் கவிதை   பாடினார்கள் .

சிறந்த  கவிதை வாசித்த  இரா .கல்யாணசுந்தரம் ச .லிங்கம்மாள் ,கு.கி. கங்காதரன் ஆகியோர்   புரட்சிக் கவிஞர் மன்றத்தின்  தலைவர் பி .வரதாசன் அவர்களிடமிருந்து விருது பெற்றனர்.

'தமிழரின் தொன்மை' என்ற நூலை வருகை தந்த அனைவருக்கும் கவிஞர் இரா .இரவி அன்பளிப்பாக வழங்கினார்.

படங்கள் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணம் .

                                                       *************

 

 


செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே!

                    கவிஞர் இரா. இரவி

                                   *****

கிரேக்கம் இலத்தீன் அரபு சீனம் எபிரேயம்
பாரசீகம் உலக செம்மொழிகளில் சிகரம் தமிழ்!

செம்மொழிக்கான தகுதிகள் உள்ள மொழி தமிழ்
செம்மையாக நிலைத்து நிற்கும் தமிழ்மொழி

தனித்து இயங்கும் தன்மை உள்ள மொழி தமிழ்
தரணியில் பிறந்த முதல்மொழி தமிழ்

மொழிகளில் சிறந்த மொழி தமிழ் என்பதை
முன்மொழிந்து வருகின்றனர் மொழி ஆய்வாளர்கள்

இலக்கியம் இலக்கணம் உள்ள இனிய மொழி
எண்ணிலடங்கா கவிதைகள் உள்ள மொழி தமிழ்

என்று தோன்றியது என்று இயம்ப முடியாத
என்றோ தோன்றிய மூத்த மொழி தமிழ்

பன்மொழி அறிஞன் மகாகவி பாரதி பாடினான்
பாரினில் உள்ள மொழிகளில் இனிமை தமிழ் என்று

பேச்சுவழக்கில் இல்லாத சமஸ்கிருதத்தை
செம்மொழி தான் என்று கோடிகள் விரையம்

உண்மைச் செம்மொழியான தமிழ்மொழிக்கு
உணர்வுடன் செலவு செய்ய முன்வருவதில்லை

தமிழின் புகழை மேடையில் புகழ்வார்கள்
தமிழுக்கு நிதி ஒதுக்கிட மனமில்லை ஒன்றிய அரசுக்கு

தமிழ்மொழி உச்சரிக்காத நாடில்லை உலகில்
தரணிஎங்கும் பரவி ஒலிக்கும் மொழி தமிழ்

சிறிதும் ஐயம் கொள்ள வேண்டவே வேண்டாம்
செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே!

                                                                    *********







மாமதுரைகவிஞர் பேரவை மதுரை சிந்தனைக் கவியரங்கம்:17

நாள்  26.11.2023

செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே !

முனைவர் மு க பரமசிவம் பேரையூர் மதுரை

 

அம்மைதந்த செந்தமிழாய் அகிலமெங்கும் போற்றும்மொழி!                 

செம்மைதந்த முதன்மைமொழி செம்மொழியில் உயர்ந்தமொழி  .       

எம்மைகாக்கும் இதயமொழி இனிமையாக்கும் ஏழிசைமொழி  .           

தம்மைவளர்க்கும் பெருமையிலே தேன்சுவையாக்கும் உலகமொழி!

 

அக்காலப் பெருமையிலேஅகரமுதல எழுத்தாகவும்.               

எக்காலப்புகழ் மணக்கும் ஏற்புடையநடையிருக்கும்  .                        

முக்காலமும் போற்றும் முத்தமிழின்பச் சுவையிருக்கும் .                

தற்காலமொழி இன்பத்திலேதனித்தப்புகழ் நிலைத்திருக்கும்!

 

அன்றுமுதலாக தனித்தோங்கும்ஆதிகாலமுதல் மொழிதமிழே  .                   

இன்மொழி சுவைவழங்கும் இனியதமிழ் சொல்விளங்கும்.               

என்றைக்கும் நிலைத்திருக்கும் எம்மொழியே உயிர்மொழியாகும்.      

பன்மொழியின் வளம்காக்கும் பழம்தமிழ் தேன்மொழியாகும்!

 

தாய்மொழிப் பெருமையாக்கும் தேசமெங்கும் ஏற்றமாக்கும் .         

நேயம்பொங்கும் பாண்டியவேந்தர் வளர்த்;ததமிழ்சங்கம்மொழி.          

ஆயக்கலை முழுவதிலும் அடக்கியாளும் முதன்மைமொழி

வாய்மையில் சிறந்தோங்கும் வளர்தமிழாக நெறி விளங்கும்!

 

பிறந்தமொழி அனைத்திற்கும் பெருமைதரும் தாய்மொழிதமிழே

திறந்தநிலைப் பெட்டகமாய் தேசமெங்கும் போற்றும்மொழி

முறையான இலக்கண இலக்கியமும் முக்காலமும் ஏற்றும்மொழி 

அறநெறிதவறாத ஆன்றோர்கள் போற்றும் அன்னைமொழி !

 

செம்மொழியில் சிறந்தமொழி சுவைதரும் தமிழ்மொழியே

இம்மொழிபோல் பூமிதனில் யாங்கணுமே எங்குமில்லையே

எம்மொழிபோல் இனியமொழி இறவாதபுகழ் படைக்கும்மொழி

தம்நிலைமாறாதப் புகழ்படைக்கும் தனியுரிமைச் செம்மொழித்தமிழே

 

தேய்பிறையாகும் பிறமொழியும் தாய்மொழியாகக் காக்கும்

வாய்மொழிச் சுவைதனில் வளம்தரும் திறனிருக்கும்

இயற்றமிழ் மொழிவளத்தில் இசைத்தமிழ் ஓசையிருக்கும்

நேயமுற்றமொழிக்களத்தில் நடனமாடும் நீதிமுறையிருக்கும் !

 

உலகமொழிவரலாற்றில் உண்மையானசெம்மொழிதமிழே

பலகலைவாழ்வியலில் பழம்பெரும் தொன்மைமொழி

வலம்வரும் மொழிக்கெல்லாம் வாழ்வுதரும் தென்பாண்டிமொழி

நிலமெங்கும் வாழுமிடம் நீதிநெறிகாக்கும் செம்மொழிதமிழே  !

 

இடம் : மதுரை

நாள்: 26.11.2023                        

முனைவர் மு க. பரமசிவம் பேரையூர்

கல்லுப்பட்டி மதுரை தமிழ்நாடு

இந்தியா -625703 அலைபேசி எண்; 97865 19558

 **************************************************

மாமதுரைக் கவியரங்கம்

நாள் : 26.11.2023 ஞாயிற்றுக்கிழமை

தலைப்பு : செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே

 

ஓசை ஒலியான ஓங்காரத் தமிழே !

வாசிக்கும் மூச்சே நேசிக்கும் தமிழே !

பேசும் மொழியாலே இயலானத் தமிழே!

பண்பாடும் வழியாலே இசையானத் தமிழே!

 

அகம் நாட தினம் அரங்கேறும் கூத்து நாடகத் தமிழே!

அகம் பேணும் அன்பு பூணும் அகமே இன்பத் தமிழே!

புறம் நீளும் பண்பு ஆளூம் மரபானத் தமிழே!

கோடும் குறியும் கொண்ட  அறமானத் தமிழே!

 

முதலில் பிறந்ததால் பழமைத் தமிழே!  

முழுமையில் சிறப்பதால் புதுமைத் தமிழே!

வளமையோடு வளர்வதால் இளமைத் தமிழே!

சுவைக்கும் உமிழால் சுரக்கும் இனிமைத் தமிழே!

 

முக்கனிச் சுவை கொண்டமூன்றாகும் முத்தமிழே!

ஆதியும் இல்லா அந்தமும் இல்லா அந்தாதித் தமிழே!

தாய்ப்பால் நிகராகும் தமிழ்ப்பால் தாய்த் தமிழே!

தன்னேரில்லா தலைமை நீதிபதி எங்கள் தமிழே!

 

தொல்காப்பிய இலக்கணம் வழி மொழிந்த

மொழிக் கோட்பாடு முப்பாலும் முழுதோதியவர்க்கு

தப்பாது வீடுபேறு வாய்த்திடும்

வான் புகழ் வள்ளுவர் தமிழே!

 

பேசும் தமிழாலே நீளும் உயிர் மூச்சு

வாழும் வழியாலே ஆளும் தமிழ் வீச்சு

சந்தமொடு தாளம் கூடக் கூட சிந்திடும் அமுதே

சிந்து நடை கோலம் போடப் போட முந்திடும் தமிழே

 

நானிலத்தில் நன்னிலத்தை நாடும் நற்றமிழே!

மாநிலத்தில் தனித்தியங்கும் மாத்தமிழே!

ஆயக் கலைகள் அறுபத்து நாலாகும் நூற்றமிழே!

எந்தமிழே!என்றுமுள செந்தமிழே! செம்மொழியே

 

 வாழிய செந்தமிழ் !

 வாழிய வாழியவே !

 கவிதையாக்கம்

 

சித்தாந்த ரத்தினம் எஸ் வி ஆர் மூர்த்தி

பெங்களூர் புலனம் : 9611226392

மின்னஞ்சல் :   moorthysvr753@gmail.com

                                                                                                                     ********

















செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே  
                     புதுக்கவிதை
                 கு.கி.கங்காதரன்

உயிருள்ள வரை மூச்சு இருக்குமாம் 
மூச்சுள்ள வரை பேச்சு இருக்குமாம்
பேச்சுள்ள வரை மொழி இருக்குமாம்
மொழியுள்ள வரை மனிதன் இருப்பானாம் 

தமிழாம் செம்மொழியாம் யாதிற்கும் முதலாம் 
தாங்கும் சிலையாம் துதிப்பாருக்கு விருந்தாம்  
தமிழர்களுக்கு அமிர்தமாம் பருக்கினால் இனிமையாம் 
தெற்கில் தோன்றியதாம் மொழிகளுக்கு விளக்காம் 

முன்னாளில் முத்தாய் முச்சங்கம் கண்டதாம் 
முருகன் என்னும் கடவுளின் வடிவழகாம் 
பன்மொழிப் பிடிகளில் சிக்காத தமிழாம்
பின்னாளும் பல்லாண்டு காலம் வாழுமாம்

செந்தமிழில் காணாத படைப்புகளே இல்லையாம் 
செம்மொழிக்கான தகுதிகள் சகலமும் உள்ளதாம் 
மொழிகளுள் செம்மொழியானது இந்நாளில் எட்டாம் 
மறையாமல் நிலைத்திருப்பது தமிழும் சீனமுமாம் 

செம்மொழிக்கான மூலங்கள் தமிழில் பலவாம் 
சமயச்சார்பின்மை தொன்மை அதில் சிறப்பாம் 
பண்பட்ட பழமை இலக்கியங்களின் களஞ்சியமாம் 
பிறமொழிச் சாராமல் தனித்து இயங்குமாம் 

உயர்சிந்தனை நடுநிலைமை படைப்புக்கு இலக்கணமாம் 
அறமோடு இலக்கியப் பொதுமையே ஆதாரமாம் 
கலை கலாச்சாரப் பண்பாட்டிற்கு அடித்தளமாம் 
கவிகளில் இத்தலைப்பு எங்கெங்கும் ஒலிக்குமாம் 
*************






























************************

Monday, November 6, 2023

29.10.2023 மாமதுரைக் கவிஞர் பேரவை கவியரங்கம் 16 - "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் " - சிறந்த கவிதைக்கு விருது - கவிதை நூல் வெளியீடு

 29.10.2023 மாமதுரைக் கவிஞர் பேரவையின் கவியரங்கம் - "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ", சிறந்த கவிதை வாசித்தோருக்கு விருது வழங்கல், முனைவர் வரதராசன் கவிதை நூல் வெளியீடு.  நாள் 29.10.2023. 

மாதுரைக் கவிஞர் பேரவையின் கவியரங்கம் மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை பள்ளியில் நடந்தது. தலைவர் பேராசிரியர் சக்திவேல் தலைமை வகித்தார் ,செயலர் கவிஞர் இரா.இரவி வரவேற்றார். பொருளாளர் கவிஞர் இரா.கல்யாணசுந்தரம், துணைத்தலைவர் முனைவர் இரா.வரதராசன், துணைச் செயலர் கு .கி .கங்காதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  

மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சக்திவேல் அவர்களின் தலைமையில்" என்ற தலைப்பில், கவியரங்கம்.நடந்தது கவிஞர்கள் இரா. இரவி, முனைவர் இரா .வரதராசன், இரா .கல்யாணசுந்தரம், கு .கி .கங்காதரன், கி. கோ.குறளடியான், ச .லிங்கம்மாள்,  மு .இதயத்துல்லா,( இளையாங்குடி ) , பெரி . கரு .சம .சமயக்கண்ணு, அஞ்சூரியா க .செயராமன் ஆகியோர் கவி பாடினார்கள் . 

மாமதுரைக் கவிஞர் பேரவை நிறுவனர் ,மறைந்தும்  மறையாத கவிமாமணி சி . வீரபாண்டியத் தென்னவன் சார்பில் அவரது மகன்  ஆதி சிவம் தென்னவன்  வாழ்த்துரையாற்றி, விருது வழங்கினார் ..பொறுப்பாளர்கள் தவிர மற்ற கவிஞர்கள் பாடிய கவிதைகளில் சிறந்த மூன்று  கவிதை வாசித்தோருக்கு விருது வழங்கினார்கள் கவிஞர்கள் பெரி .கரு .சம .சமயக்கண்ணு, கி . கோ.குறளடியான்,அஞ்சூரியா க .செயராமன் ஆகிய மூவரும் "புரட்சித் தமிழ் முரசு" விருது பெற்றனர் .முனைவர் வரதராசன் எழுதிய "கவிஞன் பார்வையில் நடப்பும் நவீனமும் "" கவிதை நூல் வெளியிடப்பட்டது.  

படங்கள் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணம் .












                                               
தினமலர் நாளிதழ் 31.10.2023

      மாமதுரைக் கவிஞர்  பேரவை , மதுரை 
 சிந்தனைக்  கவியரங்கம் -16 நாள் : 29.10.2023 
                 
 பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் 
                
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.
பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும்
 ஒரு நிறம் 
இறகு இரண்டோடு பறக்கும் இனமொன்றே! 
பழகு மொழி பேசும் கிளி
 பச்சைநிறம் -காலைப்
பொழுதைக் கூவியழைக்கும்
சேவல் வெள்ளை - மாலை
பொழுதை மயக்கும்  குரல் குயில் 
 கறுப்பு 
-வருமழை 
மேகம் கொண்டாடும் 
மயிலோ கலப்புநிறம் .
(8)
மலை ஆறுகள் மகிழ்ந்து குதித்தோடும் ! 
மண்ணை அரித்து மணலைக் 
 குவித்தாடும் !  
எண்ணம் போல்  வளைந்து 
 எழுந்தோடும் !
வண்ணம் பலக் குழைத்து 
 வழிந்தோடும் !
ஓடும் நிலத்தால் கொண்டது
 நிற(புற)  வேற்றுமை !
 கடலின் சங்கமத்தில் கண்டது ஒற்றுமை !
(12)
பிறப்பெடுத்த மொழிகள் பற்பல
 நூறாகும் !
உருவெடுத்த  நாடுகள் பற்பல
 வேறாகும் !
திரைகடல் ஓடி திரவியம் தேடி
வரப்பழித்தத்  தமிழர் !.

 யாதும் ஊரே ! யாவருங் கேளீர் !
 தீதும் நன்றும் பிறர் தர வாரா! 
வரையறுத்து வாழ்ந்த  
 பண்பட்டத்  தமிழர்! 
பெரியோரை வியத்தலும் இல்லை !
- அதனினும்
சிறியோரை இகழ்தலும் இல்லவே இல்லை ! (20)

ஓடி வரும்  நீராறு கூடுமிடம் கடல் சங்கமமாகும் 
பாடி வரும் காற்றோடு கூடிடும்தமிழ்ச் சங்கமமமாகும் 
பிறப்பொக்கும் மனிதர்கள் கூடும்
 சமூகச் சங்கமமமாகும் 
சிறப்பென்பது  சேர்ந்து 
வாழ்தலே சமநீதியாகும் ! (24)
✍️
சித்தாந்த ரத்தினம்  எஸ் வி ஆர் மூர்த்தி பெங்களூர் 
நாள் : 28.10.2023 
புலனம் : 9611226392


பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்!
           கவிஞர் இரா. இரவி

உலகில் பிறந்த யாவரும் சமம் என்று
ஓங்கி உரைத்தவர் ஒப்பற்ற திருவள்ளுவர்
உயர்ந்தவர் தாழ்ந்தவர் மனிதரில் இல்லை
உயர்வு தாழ்வு எல்லாம் தவறான கற்பிதங்கள்

நெற்றியில் பிறந்தவன் என்பதெல்லாம் கட்டுக்கதை
நெற்றிப் பொட்டில் அடித்துச் சொன்னவர் வள்ளுவர்
தோளில் பிறந்தவன் என்பதெல்லாம் புரட்டுக்கதை
தரணியில் பிறந்த யாவரும் சமம் என்றார்

ஏற்றத் தாழ்வுகள் எல்லாம் வகுத்திட்ட சதி
ஏற்றத்தாழ்வு இல்லவே இல்லை என்று உரைத்தார்
நம்ப முடியாத புரட்டுக்களை நம்பவே நம்பாதீர்
நமக்குள் சாதியை உருவாக்கியது சதி என்றார்

கற்பிக்கப்பட்ட கற்பனைகளை ஏற்காதீர் என்றார்
கட்டாயம் கேள்விகள் கேட்கச் சொன்னார் வள்ளுவர்
எதையும் ஏன், எதற்கு, எப்படி என ஆராய வைத்தவர்
எதையும் சிந்தித்து சீர் தூக்கி பார்க்கச் சொன்னவர்

யார் சொன்னாலும் சிந்திக்காமல் ஏற்காதே
எதையும் ஆராய்ந்து அறிந்திடு என அறிவுறுத்தியவர்
சாதி என்பதே சதி என்பதை உணர வைத்தவர்
சாதியை மறந்து சாதிக்க நம்மை வலியுறுத்தியவர்

தெய்வத்தால் முடியாதது கூட முயன்றால் முடியும்
தரணியில் முயற்சி திருவினையாக்கும் என்றவர்
உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்பதை தவிடுபொடியாக்கியவர்
உலகில் மனிதர் யாவரும் சமம் வேறுபாடு இல்லை என்றவர்.
******






மாதுரை கவிஞர் பேரவை மதுரை                 

சிந்தனைக் கவியரங்கம் 29-10-2023

                    

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

          

அறம்சார்ந்த உயிரனைத்தும்,                

அன்புவழியில் நடைபயில ,                      

புறக்கடையில்  நுழைந்தே  ,                      

பகட்டாகும் சாதீயத்தீயாகிடுதே


பிறப்பொக்கும் எல்லாஉயிர்க்கும் ,              

பேதமை வேதனையாகுதே,
மறபுநிலை சீர்திருத்தம்,                        

மனமதுவே செம்மையானால்


தனதுநிலை உயர்வாகும்,                        

தினமதுவே மறைந்திடுமே  ,
மனதினிலே சமமானால்,                        

முத்தான செந்தமிழன்

                      

கல்வியெனும் ஒளிவிளக்கில் ,  

கலங்கரையாய் வழிகாட்டிடுமே,                

எல்லோரும் சமமென்றால்,                  

ஏற்றத்தாழ்வும் மறைந்திடுமே

வல்லமைதரும்  நல்வாழ்வும்,                  

வாழ்வியலில் நிலைத்திடுமே,
இல்லாத பொய்மைவாதம்,          

இருந்தநிலை  மறைந்திடுமே ,

பாடுகின்ற கவியரங்கம்,                    

புவியெங்கும் நிலையுயரும்,                  

ஓடுகின்ற நதிநீரும்,

ஒற்றுமைக்கு வழிகாட்டும்,                    

 

நீடுபுகழ்வாய்மை வெல்லும் ,                        

நல்லோர்களின் குடும்பப்பாசம் ,
ஆடுகின்ற மாற்றஙகளால்,                

அகிலமெங்கும் மனிதநேயமாக்குமே

 

முனைவர் மு.க பரமசிவம்,

பேரையூர் கல்லுப்பட்டி

மதுரைமாவட்டம், அலைபேசி, 97865 





        பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
                           புதுக்கவிதை 
                       கு.கி.கங்காதரன் 

தானாக எவ்வுயிரும் தோன்றுவதில்லை 
தனிமையால் எவ்வுயிரும் பிறப்பதில்லை 
உண்ணாமல் எவ்வுயிரும் வாழ்வதில்லை 
இறவாமல் எவ்வுயிரும் இருப்பதில்லை 

எவ்வுயிர்க்கும் பிறப்பதில் ஒற்றுமை உண்டு 
எவ்வுயிர்க்கும் வாழ்வதில் ஒற்றுமை உண்டு 
எவ்வுயிர்க்கும் இறப்பதில் ஒற்றுமை உண்டு 
இதில் எவ்வுயிர்க்கும் விதிவிலக்கு அன்று.

அண்டத்தில் அளவற்ற உயிர்களின் இருப்பு 
அதது அதனதன் பாணியில் பிறப்பு 
அரசனுக்கும் ஆண்டிக்கும் பேதம் இல்லை 
ஆனைக்கும் பூனைக்கும் மாற்றம் இல்லை 
 
ஆறு அமைதியாய் ஓடினால் ஆராதிப்பார் 
ஆற்றில் வெள்ளம் புரண்டால் அஞ்சுவார் 
ஆக்கச் செயல் செய்தால் புகழ்வார் 
அழிவுச் செயல் செய்தால் இகழ்வார் 

பாம்பை வீட்டில் வளர்க்க விரும்பார் 
பசுவை கடவுளாய் எண்ணித் துதிப்பார் 
நல்ல குணத்தால் ஏற்றம் பெறுவார் 
கெட்ட குணத்தால் இறக்கம் அடைவார் 

உயர்ந்தோர் தவறு செய்தால் குற்றமே 
தாழ்ந்தோர் நன்மை செய்யின் நன்றே  
தொழிலால் குணத்தால்  கிட்டும் உயர்வே 
பிறப்பால் வாழ்வால் எட்டாது சிறப்பே 

                        **********

படங்கள் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணம் .
**********