Wednesday, January 31, 2024

28.1.2024 மாமதுரைக் கவிஞர் பேரவை- கவியரங்கம் 19 தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள்-விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி

 


28.1.2024 மாமதுரைக் கவிஞர் பேரவையின் கவியரங்கம் - "தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் ", என்ற தலைப்பில் நடந்தது  மாதுரைக் கவிஞர் பேரவையின் கவியரங்கம் மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை பள்ளியில் நடந்தது. 

தலைவர் பேராசிரியர் சக்திவேல் தலைமை வகித்தார் ,செயலர் கவிஞர் இரா.இரவி வரவேற்றார். பொருளாளர் கவிஞர் இரா.கல்யாணசுந்தரம், துணைத்தலைவர் முனைவர் இரா.வரதராசன், துணைச் செயலர் கு .கி .கங்காதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சக்திவேல் அவர்களின் தலைமையில்,"தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் " என்ற தலைப்பில், கவியரங்கம்.நடந்தது கவிஞர்கள் இரா. இரவி, முனைவர் இரா .வரதராசன், இரா .கல்யாணசுந்தரம், கு .கி .கங்காதரன், மா .வீரபாகு ,கி. கோ.குறளடியான், ச .லிங்கம்மாள், மு .இதயத்துல்லா ( இளையாங்குடி ) , அ.அழகையா, அஞ்சூரியா க .செயராமன் , தென்காசி ம .ஆறுமுகம் ,புலவர் மகா .முருகபாரதி ,செ..அனுராதா , சு முனைவர் .நாகவள்ளி , சோ. வனசா ஆகியோர் கவிதை பாடினார்கள் . 

கி. கோ.குறளடியான் அவர்களின் 75ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பொன்னாடைப் போர்த்தி" தமிழரின் தொன்மை "நூல் வழங்கி வாழ்த்தினார்கள் .

கவிஞர்கள் பாடிய கவிதைகளில் சிறந்த மூன்று கவிதை வாசித்த கவிஞர்கள் விருது பெற்றனர் முனைவர் வரதராசன் அவர்களின் நூல் பரிசாக வழங்கப்பட்டன .. . மாமதுரைக் கவிஞர் பேரவை நிறுவனர் ,மறைந்தும் மறையாத கவிமாமணி சி . வீரபாண்டியத் தென்னவன் சார்பில் அவரது மகன் ஆதி சிவம் தென்னவன் விருதுகள் வழங்கி நன்றி கூறினார்.

முன்னாள மாமன்ற உறுப்பினர் விசய  ராசன் உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .














தரணி போற்றும் பொன்னாள்

கவிஞர் இரா. இரவி

***

அறுவடைத் திருநாளைக் கொண்டாடும் தமிழினம்

அகிலம் போற்றும் அற்புத நாள் பொங்கல் !

பழையன கழிதல் புதியன புகுதல் என்று

புதுப்பித்துக் கொள்ளும் நாளே போகிப் பொங்கல் !


புத்தாடை அணிந்து புத்தரிசிப் பொங்கலிட்டு

புத்தாண்டை தைத்திருநாளை தொடங்கும் பொங்கல் !

கதிரவனை இயற்கையை வணங்கிடும் நன்னாள்

கட்டி வெல்லம் நெய்இட்டு படைத்திடும் பொங்கல் !


விளைந்த கரும்பையும் வைத்து வணங்கும் நாள்

வீணான மூடநம்பிக்கைகள் இல்லாத திருநாள் !

மாட்டுக்கு விழா எடுக்கும் ஒரே இனம் தமிழினம்

மாட்டுப்பொங்கல் வைத்து மாட்டை வணங்கும் பொங்கல் !


கடற்கரைகளில் சந்தித்து மகிழும் காணும் பொங்கல்

காணமுடியாது கொண்டாடாத தமிழர்களை உலகில் !

வீரம்மிக்க ஜல்லிக்கட்டு நடத்தி மகிழும் நாட்கள்

வியந்து பார்க்கும் வீரத்தை உலகம் யாவும் !


உலகில் தோன்றிய முதலினமான தமிழினம் இன்று

உலகம் முழுவதும் பரந்து வாழ்வது உண்மை !

உலகின் முதல்மொழியான தமிழ்மொழியோ இன்று

ஒலிக்காத நாடு இவ்வுலகில் இல்லை உண்மை !


பண்பாடு பறைசாற்றும் பாரம்பரிய திருவிழா பொங்கல்

பண்டைத்தமிழர் காலம் தொட்டு நடந்துவரும் பொங்கல் !

கலைநிகழ்ச்சிகள் நடத்தி மகிழும் பொங்கல்

காணக் கண்கோடி வேண்டும் காண்போருக்கு. !

*************





















தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள்

புதுக்கவிதை 
கு.கி.கங்காதரன் 

வரிசைகட்டி வரும் விழாக்கள் 
வசந்தமாய் மாற்றும் தைமாதம் 
தைப்பொங்கலே அதன் விடிவெள்ளி
தமிழர்கள் மகிழ்ச்சியின் எதிரொளி 

வீரத்திற்குச் சவால் விடும் விழா
வேடிக்கை விளையாட்டுக்கான விழா
உழவுக்கு நன்றி சொல்லும் விழா
ஊரெங்கும் உற்சாகம் தரும் விழா

வர்ணங்கள் தீட்டிய புதுப்பானை நடுவிலே
வளையலாய்க் கொத்து மஞ்சள் கழுத்தினிலே
செங்கரும்பு நிமிர்ந்து நிற்கும் இருபறத்திலே 
சத்தமாக ஒலிக்கும் பொங்கலோ பொங்கலே 

 மகுடமாய் அமையும் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி 
முரட்டுக் காளைகள் துல்லிடும்  எழுச்சி 
திமிலைப் பிடித்துத் தாவிடும் கிளர்ச்சி 
தெருவெங்கும் மக்கள் முகத்தில்   மகிழ்ச்சி 

பழைமைக்கு விடை கொடுக்கும் தினம் 
புதுமைகளை புன்னகையுடன் வரவேற்கும் தினம் 
வழிவழியாய் வந்திடும் பொங்கல் திருநாள் 
வந்தாரை வாழவைக்கும் தமிழனின் பொன்னாள் 

*******************

Friday, January 12, 2024

31.12.23 கவியரங்கம் 18 தமிழ் உயிரத் தமிழன் உயர்வான்- பாரதி பிறந்தநாள் திருக்குறள் காட்டும் ஊக்கமும் உயர்வும்- வள்ளுவன் நோக்கில் களவியல்- கவிதை நூல்- வரதராசன்



 









31.12.2023 மாமதுரைக் கவிஞர் பேரவையின் கவியரங்கம் - "தமிழ் உயிரத் தமிழன் உயர்வான் ", என்ற தலைப்பில் நடந்தது . 31.12.2023 . மாதுரைக் கவிஞர் பேரவையின் கவியரங்கம் மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை பள்ளியில் நடந்தது. தலைவர் பேராசிரியர் சக்திவேல் தலைமை வகித்தார் ,செயலர் கவிஞர் இரா.இரவி வரவேற்றார். பொருளாளர் கவிஞர் இரா.கல்யாணசுந்தரம், துணைத்தலைவர் முனைவர் இரா.வரதராசன், துணைச் செயலர் கு .கி .கங்காதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சக்திவேல் அவர்களின் தலைமையில் "தமிழ் உயிரத் தமிழன் உயர்வான் "," என்ற தலைப்பில், கவியரங்கம்.நடந்தது கவிஞர்கள் இரா. இரவி, முனைவர் இரா .வரதராசன், இரா .கல்யாணசுந்தரம், கு .கி .கங்காதரன், மா .வீரபாகு ,கி. கோ.குறளடியான், ச .லிங்கம்மாள், மு .இதயத்துல்லா,        ( இளையாங்குடி ) , பெரி . கரு .சம .சமயக்கண்ணு, அஞ்சூரியா க .செயராமன் , ம .ஆறுமுகம் ,புலவர் மகா .முருகபாரதி ,செ..அனுராதா ,சு முனைவர் .நாகவள்ளி ஆகியோர் கவிதை பாடினார்கள் . 

புரட்சிக் கவிஞர் மன்றத்தின் தலைவர் பி .வரதராசன் விருதுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். .. கவிஞர்கள் பாடிய கவிதைகளில் சிறந்த மூன்று கவிதை வாசித்த கவிஞர்கள் வீரபாகு,மகா .முருகபாரதி,தென்காசி ஆறுமுகம் , விருது பெற்றனர் . கவிதை போட்டியில் வென்ற கவிஞர் சமயக்கண்ணு முதல் பரிசும் ,கவிதாயினி செ..அனுராதா இரண்டாம் பரிசும் ,கவிஞர் பஞ்சாபிகேசன் மூன்றாம் பரிசும் பெற்றனர் . .முனைவர் வரதராசன் எழுதிய "வள்ளுவன் நோக்கில் களவியல் " கவிதை நூல் வெளியிடப்பட்டது. மாமதுரைக் கவிஞர் பேரவை நிறுவனர் ,மறைந்தும் மறையாத கவிமாமணி சி . வீரபாண்டியத் தென்னவன் சார்பில் அவரது மகன் ஆதி சிவம் தென்னவன் நன்றி கூறினார்.

ப டங்கள் இனியநண்பர் புகைப்படக் கலைஞர் மதுரை உலா ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்.





தமிழ் உயரத் தமிழன் உயர்வான்!
-    கவிஞர் இரா. இரவி

தமிழ் உயர என்ன வழி சிந்திப்போம்
தமிழை உயர்த்துவது தமிழரின் கடமையாகும்!
எதைச் செய்தாலும் தமிழில் செய்வோம்
அர்ச்சனை ஆராதனை அனைத்தும் தமிழாகட்டும்!

தமிங்கில உரையாடலுக்கு முடிவு கட்டுவோம்
தமிழைத் தமிழாகவே பேசிப் பழகுவோம்!
உயர்நீதி மன்றங்களில் தமிழில் வழக்காடுவோம்
உயர்நீதி மன்றத்தில் தமிழே ஒலிக்க வேண்டும்!

வணிக நிறுவனங்களில் தமிழ் இடம் பெறட்டும்
விளம்பரப் பலகைகளில் தமிழே முதன்மையாகட்டும்!
உலகின் முதல்மொழி நம் தமிழ் என்பதை
உலகத் தமிழர்கள் யாவரும் உணர வேண்டும்!

முதல்மொழி தமிழை உருக்குலைய விடலாமா?
முத்தமிழை வளர்ப்பது தமிழரின் கடமையன்றோ?!
தேமதுரத் தமிழோசை இல்லங்களில் ஒலிக்கட்டும்
தன்னிகரில்லா தமிழைப் போற்றி வளர்த்திடுவோம்!

தமிழோடு பிறமொழி கலப்பதை நிறுத்திடுக
தமிழை தமிழாகவே பேசிப் பழகிடுவோம்!
தமிழ்வழிக் கல்வியை நாளும் வலியுறுத்துவோம்
தாய்மொழிக் கல்வியே குழந்தையை அறிவாளியாக்கும்!

தமிழ் படித்தால் இளமை இருக்கும் முதுமை வராது
தமிழை அனைவரும் விரும்பி படிக்க வைப்போம்!
உயரத் தமிழன் உயர்வான் உணர்வாய்
தமிழை உயர்த்த அணிவகுப்போம் வருவாய்!
********






















தமிழ் உயரத் தமிழன் உயர்வான்
                   புதுக்கவிதை 
             கு.கி.கங்காதரன் 

கற்பார் இல்லையேல் மொழி அழியும் 
காப்பார் இருப்பின் மொழி வளரும்  
இருப்போர் உணர்ந்தால் தமிழ் வாழும்  
ஏற்பார் நிறைந்தால் எழுச்சி பெறும்.

கல்வெட்டில் கற்கண்டுத் தமிழை ரசிக்கலாம்  
பனையேட்டில் பாட்டுத் தமிழைப் பார்க்கலாம் 
காகிதயேட்டில் அழகுத் தமிழைச் சுவைக்கலாம் 
கணினிக்கருவியில் கன்னித் தமிழைக் கேட்கலாம்

தங்கத்தைத் தேய்க்கத் தேய்க்க  ஒளி மிகும் 
தமிழைச் சுவைக்கச் சுவைக்க இனிமை கூடும்     
வெண்பனியைப் பார்க்கப் பார்க்க இதயம் குளிரும்   
வண்டமிழைக் கேட்கக் கேட்க மெய் சிலிர்க்கும்  

நீராய் தாகத்தைத் தீர்ப்பவள் 
நிலமாய் பாரத்தைச் சுமப்பவள் 
நிலவாய்க் குளிர்ச்சியை தருபவள் 
நிலையாய் அன்பைச் சுரப்பவள் 

தமிழில் பிறமொழிகளின் கலப்பு 
தரமான செம்மொழியின் இழப்பு 
தூயதமிழுக்குக் காட்டும் சிறப்பு 
தரணியில் தமிழர்களுக்கு மதிப்பு 

வெவ்வேறு வடிவங்களில் தவழும் தமிழ் 
வளமான வாழ்வுக்கு வழிகாட்டும் தமிழ் 
அகில மொழிகளுக்கு அன்னையாகும் தமிழ் 
உலகத் தமிழர்களுக்கு அடையாளமாகும் தமிழ் 
**********************************



மாமதுரைக் கவிஞர் பேரவை, மதுரை  'திருக்குறள் காட்டும் ஊக்கமும் உயர்வும்'  என்ற தலைப்பில் நடத்தியக் கவிதைப் போட்டியில் கலந்து கொண்டு தங்களது பாத்திறன் கொண்ட கவிதைகளை அனுப்பிய அனைத்துக் கவிஞர்களுக்கும் வணக்கம். இந்தக் கவிதைப் போட்டியில் மூன்று சிறந்த கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு  விருது பெறும் மூன்று கவிஞர்கள் பின்வருமாறு: 

1. கவிஞர் சமயக்கண்ணு - மதுரை 
2. கவிதாயினி செ. அனுராதா - மதுரை 
3. கவிஞர் பஞ்சாபிகேசன் - அரியலூர் 















********