24.11.2019. இன்று .மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை பள்ளியில்
மாமதுரைக் கவிஞர் பேரவையின்
தலைவர் கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் தலைமையில் நடந்த கவியரங்கம் .
முன்னிலை செயலர் கவிஞர் இரா .இரவி !
படங்கள் இனிய நண்பர் புகைப்படக் கலைஞர்
ரெ .கார்த்திகேயன் & கு.கி.கங்காதரன்
கை வண்ணம்
அன்று கவிதை பாடிய கவிஞர்களின் கவிதைகளும்,
மின்படத்தொகுப்பும்
கவிஞர் செயராமன் - கவிதை
அன்னைத் தமிழை மறக்காதே !
அடையாளத்தை இழக்காதே!
கு.கி.கங்காதரன் மதுரை 9865642333
அறிவியலில் பிழை நாட்டை அழிக்கும்
உற்பத்தியில் பிழை தரத்தைக் கெடுக்கும்
மருத்துவரின் பிழை உயிரை மாய்க்கும்
மொழியில் பிழை அடையாளத்தை இழக்கும்
செயலில் மாற்றம் மகிழ்ச்சியைத் தரலாம்
வயலில் மாற்றம் வளர்ச்சியைத் தரலாம்
எண்ணத்தில் மாற்றம் எழுச்சியைத் தரலாம்
அன்னைத்தமிழில் மாற்றம் தளர்ச்சியைத் தருமே
விதையைத் தேடி மரம் அலைகிறது
விண்ணைத்தேடி நிலவு அலைகிறது
தீயினைத் தேடி தீக்குச்சி அலைகிறது
தமிழர்களைத் தேடி தமிழ் அலைகிறது .
தமிழனே தமிழ்பேச மறக்கின்றாயே
தங்கத்தை தகரமாகப் பார்க்கின்றாயே
இமயத்தை இளக்காரமாய் நினைக்கிறாயே
அன்னைத்தமிழை வீதிக்கு இழுக்கிறாயே
அந்நியமொழி ஆதிக்கத்தில் தமிழும் வீழ்ந்தது
அழியப்போகும் மொழியில் தமிழும் சேர்ந்தது
அடையாளம் தெரியாமல் தமிழ் புதையப்போகிறது
அப்போது தமிழ் இனமே காணாமல் போகப்போகிறது
**********************
நன்றி

































































































No comments:
Post a Comment