மாமதுரைக் கவிஞர் பேரவை - கவியரங்கம் - 34-
அண்டை மொழிகள் அழிந்தது ஏன் ?
கவியரங்கம் - 34
மாமதுரைக் கவிஞர் பேரவை- சிந்தனைக்கவியரங்கம், மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை மழலையர் பள்ளியில் நடந்தது.
"அண்டை மொழிகள் அழிந்தது ஏன் ?" எனும் தலைப்பில் கவியரங்கம் நடந்தது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.
தலைவர் பேராசிரியர் சி .சக்திவேல் தலைமையில் கவியரங்கம் நடந்தது. செயலர் தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா .இரவி வரவேற்றார்.
தலைவர் கவிஞர் பேராசிரியர் சக்திவேல் அவர்கள் தலைமையில் ,கவிஞர்கள் இரா .இரவி , முனைவர் இரா.வரதராசன், , இராம பாண்டியன், பால் பேரின்பநாதன், குறளடியான், ச. லிங்கம்மாள், அனுராதா , மா .முனியாண்டி , அஞ்சூரியா க.செயராமன் , தென்காசி புலவர் ம. ஆறுமுகம், இளையான்குடி இதயத்துல்லா, ந .சுந்தரம் பாண்டி , பா .பழனி , ஆகியோர் கவிதை பாடினார்கள்.
பேரவையின் சார்பில் சிறப்பாக கவிதை பாடிய நால்வருக்கு, தென்காசி திருவள்ளுவர் கழகம் வெளியிட்ட திருக்குறள் உரை நூல் பரிசாக வழங்கினர். துணைச்செயலர் கவிஞர் கங்காதரன் கவிதையை, தலைவர் சக்திவேல் வாசித்தார். துணைத்தலைவர் இரா.வரதராஜன் நன்றி கூறினார்
கவியரங்கம் நடத்த மாதாமாதம் மணியம்மை பள்ளியை நன்கொடையாகத் தந்து உதவும் இப்பள்ளியின் தாளாளர், புரட்சிப் பாவலர் மன்றத்தின் தலைவர் பி . வரதராசன் அவர்களுக்கு கவிஞர்கள் நன்றி கூறினார்கள்.
படங்கள் : மதுரை உலா ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்.
*************
அண்டைமொழிகள் அழிந்தது ஏன்?
கவிஞர் இரா. இரவி
*****
கர்னாடகத்தில் இந்தி மொழியை ஏற்றதனால்
கன்னட மொழி அழிந்ததாக அறிவிக்கின்றனர் !
வடமாநிலங்களில் இந்தியை ஏற்றதனால்
அவர்களின் தாய்மொழியை மறந்தனர் !
மும்மொழியை ஏற்றிட்ட மாநிலங்களில்
தம்மொழி அழிந்ததாக புலம்புகின்றனர் !
இருமொழிக் கொள்கையே என்றும் நன்று
தாய்மொழி தமிழும் உலகமொழி ஆங்கிலமும் போதும் !
இலக்கணம் இலக்கியம் நிறைந்திட்ட மொழி
இனிய தமிழ் மொழி இருக்கையில் !
மந்தி மொழியான இந்திமொழி எமக்கு எதற்கு?
இந்தியை அன்றும் இன்றும் என்றும் எதிர்ப்போம் !
மொழிக்காக உயிர் நீத்த வரலாறு தமிழருக்கு உண்டு
மொழியை உயிருக்கு மேலாக மதிப்பவன் தமிழன் !
ஒண்டவந்த பிடாரி ஊர்பிடாரியை விரட்டிய கதையாக
ஒண்டவரும் இந்தியை என்றும் எதிர்ப்போம் !
தமிழகத்தில் இருமொழிக் கொள்கை என்றும் தொடரும்
இந்தியை கட்டாயமாக்க துடிப்பதை நிறுத்துக!
கல்வி நிதியை வழங்காமல் இருப்பது கொடுமை
கல்வியில் சிறந்த தமிழ்நாட்டுக்கு அநீதி ஏன்?
மாநில சுயாட்சிக்கு மரியாதை தாருங்கள்
ஒன்றிய அரசு தமிழக அரசோடு ஒன்றிட வேண்டும் !
அண்டை மாநிலங்களில் அழிந்ததைக் கூறினோம்
அன்னைத் தமிழை அழிந்திட விடவே மாட்டோம் !
***************
கவியரங்கத் தலைப்பு :
*அண்டை மொழிகள்*
*அழிந்தது ஏன் ?*
*உயி(ய)ர் இலக்கு*
உடல் இருந்தால் *சித்திரம்* - அதன்
உயிர் காப்பே *பத்திரம்* !-உடல்
காத்து வாழ்தலே *உயர் இலக்கு*
காத்த உடலாலே மொழி காத்தல்
*உயிர் இலக்கு* !
*மொழிக் காப்பு*
உயிருக்கு உடை உடல்
*தான் காப்பு!*
உடலுக்கு உடை தன்மானம்
*தற் காப்பு!*
உயிரோடும் உடல் வாழ உணவு
*ஒரு காப்பு!*
உணவோடு உணர்வோடும்
*திரு காப்பு !*
*மொழியாக்கம்*
உயிருக்கு உ(ற)ணவாகும்
உள்ளத் துடிப்பு!
உள்ளத் துடிப்புக்கு உதவிடும்
**உயிர்*
*உள் மூச்சு** !
உள் மூச்சில் உருவாகும்
*உள்ளப் பெருமூச்சு* !
வெளி மூச்சில் வெளியாகும்
உள்ளத்து உணர்வுகளே
உருவாக்கும் *மொழியாக்கம்* !
உருவாக்கும் மொழி- தாய்
கருவில் பதிவான *சுழி சுருக்கம்.*
உருவான கருவில் உடன் வளரும்
திருவான மொழி *நாப் பழக்கம்* .
நினைத்திடும் *நெஞ்சம்*
பார்த்திடும்
*கண்கள்*
கேட்டிடும்
*செவிகள்*
செய்திடும்
*கைகள்*
நடத்திடும்
*கால்கள்*
கடத்திடும் *மொழியுணர்வு*
*மொழி அழிவிற்கான* *முன்னறிவிப்புகள்*
உண்ணும் உணவில் *மாற்றம்* !-அதைப்
பண்ணும் முறையில் *மாற்றம்* !
உடுத்தும் உடையில் *மாற்றம்* ! -அது
படுத்தும் பாடு பண்பாட்டு *மாற்றம்* !
பேசும் மொழியில் பிறமொழிக் *கலப்பு* - வாய்
பேசப் பிறழும் நாவின் *தவிப்பு!*
*மொழி வாக்கு*
உணர்வோடும் *உயிராகும்* -
உயிரோடும் *உடலாகும்* !
உதடோடு உறவாடும்
உமிழோடும் *நாக்கு* .-
உலகோடு உறவாட
உருவான
*போக்கு*
உரையாடும்
*மொழி வாக்கு*
வழி மொழியும் மொழியாலே
*இனமே*
*சிறக்கும்* - பேச்சு
மொழி அழியும் பழியாலே
*இனமே இறக்கும்* !
சித்தாந்த ரத்தினம்
*எஸ் வி ஆர் மூர்த்தி*
பெங்களூர்
அலைபேசி : *9611226392*
நாள் : *25.05.2025*
***********
அண்டை மொழிகள் அழிந்தது ஏன் ?
புதுக்கவிதை
கு.கி.கங்காதரன்
சொற்கள் வளமுள்ள மொழிகளே வாழும்
சோறு போடும் மொழிகளே நிலைக்கும்
கல்விகளில் உலாவும் மொழிகளே வளரும்
கணினியில் இல்லாத மொழிகள் தேயும். .
உலகமே வணிக மயமாகும் காட்சிகள்
இலக்கியச் சிந்தனை அழிந்ததே சாட்சிகள்
உண்மையில் வாணிப மொழிகளே தழைக்கிறது
உடன் வளராத மொழிகளோ தத்தளிக்கிறது.
தாய்மொழியில் புதுப்புது சொற்கள் வேண்டும்
தொழிற்நுட்பப் பாடத்தில் புகுத்தல் வேண்டும்
மருத்துவப் படிப்பில் தாய்மொழி வேண்டும்
மலரும் வேளாண் உள்மொழியில் வேண்டும்
நித்தமும் அந்நிய மொழிகளில் ஆய்வுக்கட்டுரைகள்
நில்லாமல் கணினியில் ஏற்றப்படும் பதிவுகள்
தாய்மொழியில் மொழிபெயர்ப்பு செய்வது யார்?
தாழ்ந்து போகும் அச்செயலைச் செய்யாததால்!
அழித்த மொழிகளுக்குப் புலம்புவது அர்த்தமில்லை
அங்கே வணிக இணைச்சொற்கள் உருவாக்கவில்லை
கணினி ஊடகங்களின் பயன்பாடு கொண்டதில்லை
காரணமில்லாமல் அண்டை மொழிகள் அழிந்ததில்லை ...
*************
******************************
No comments:
Post a Comment